top of page

கார்த்திக் நேத்தாவின் ஒரு கவிதை



ஆறறிவென்றே அலட்டாமல்

எளிதாய் நானும் ஓர் உயிர் என்றே இருப்பேனே

குழம்பாமல் யார் உடைத்தாலும்

சிரிக்கின்ற பொம்மைப்போலே

நான் என் இயல்பில் இருப்பேன்

ஓடும்நதியின் மேலே

உட்காரும் தட்டான் போலே

லேசாக அமர்ந்தே பறப்பேனே புவிமேலே

தாய் தூங்கும் அழகைப் பார்த்துத்

தான் தூங்கும் மழலைப்போலே

பேரன்பைப் போலி செய்வேனே நிறுத்தாமல்..

கார்த்திக் நேத்தா



Comments


Tags

Copyright © 2024 All Rights  Reserved - RithuPedia.

bottom of page