top of page

அளவுக்கு மிஞ்சினால்


ree

வீசும் காற்று

விசிறி பிடித்தால் தென்றல்

வெறி பிடித்தால் புயல்...


பொழியும் வானம்

பூமியில் சேமித்தால் மழை

பூமியைச் சேதப்படுத்தினால் வெள்ளம்...


பற்றும் தீ

சுடர் விட்டால் தீபம்

சுட்டெரித்தால் நெருப்பு...


கலைந்திடும் அமைதி

பிரவாகமானால் ஊற்று

பிரளயமானால் பூகம்பம்...


உள்ளத்து உணர்வில்

அன்பு நினைத்தால் உறவு

கோபம் மிகுந்தால் பகை...


வெளிப்படும் குணம்

தாக்குதல் மிகுந்தால் மிருகம்

காத்தல் மிகுந்தால் தெய்வம்...

Comments


Tags

Copyright © 2024 All Rights  Reserved - RithuPedia.

bottom of page