ஒரு உயிரின் இறுதி வலி இப்படி தான் இருக்கும்..!!
- RithuPedia
- Mar 8
- 1 min read

அறுத்துக் கொள்ளலாமா வேண்டாமா என்று நூறு முறையாவது கத்தியை வைத்து வைத்து வலிக்குமென்று அழுதிருப்பார்கள்.
தூக்க மாத்திரைகளை விழுங்குவதற்கு முன்பு கூட யாராவது வந்து காப்பாற்றி விடுவார்களென்று நம்பியே விழுங்கியிருப்பார்கள்.
தூக்கு கயிற்றை மாட்டிக் கொள்ளும் முன் பத்து முறையாவது கழுத்தில் மாட்டி மாட்டியேனும் கழற்றியிருப்பார்கள்.
உயரத்தில் இருந்து குதிக்கும் முன்பே வலியே இல்லாமல் செத்து விட வேண்டுமென்று வேண்டியிருப்பார்கள்.
தண்ணீரில் மூழ்கி சாகும் இரண்டு நொடிகளாவது மூச்சு விட வேண்டுமென்று வெளியேறத் துடித்திருப்பார்கள்.
ஓடும் ரயிலில் விழுந்தே ஆக வேண்டுமென்று நினைத்தவர்கள் கூட கண்களை இறுக மூடிக்கொண்டு தன்னை மாய்த்துக் கொண்டவர்கள் தான்.
கோழைகள் தான் தற்கொலை செய்வார்களாம் யார் சொன்னது, முதுகில் குத்துப் பட்டுச் சாவதை விடவும் நெஞ்சில் குத்துப் பட்டு சாவதற்கு தான் துணிச்சல் தேவை. இந்த நிமிடமே எல்லாவற்றிலும் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளத்தான் அதி தைரியம் வேண்டும்.
பிடித்தவர்களை பிரிந்து போகவும் மறக்கவே முடியாதேன மண்டியிட்டுக் கிடந்தவர்களையும் சட்டென தூக்கியெறிந்து விட்டு போக அந்த உயிர் பல முறை பரிசீலித்து இருக்கும். தன் மீது கருணை காட்டும் படி பலமுறை அழுதிருக்கும், அடம்பிடித்திருக்கும், கெஞ்சியிருக்கும், மிரட்டியும் இருக்கும், காதலே இல்லாவிட்டாலும் கருணையை எதிர்பார்த்திருக்கும்.
உயிராய் நினைத்ததையெல்லாம் உதறி தள்ளி விட்டு போகிறார்கள் என்றால் உபயோகமற்ற ஒன்றாய் தன்னை தூக்கியெறிந்ததன் பெருங்கோபம் அது.
தனிமையை விரும்பிக் கொண்டிருப்பவர்கள் தான் தற்கொலையின் ஆரம்ப நிலையில் அடியெடுத்து வைத்தவர்களாய் இருப்பார்கள். தற்கொலை எல்லாவற்றிற்கும் முடிவு அல்ல தான், ஆனால் அதே சமயம் வாழ்க்கை பாரமானால் விடும் மூச்சுக் காற்றும் சுமையாகும் உடலுக்கு. அழுது கொண்டிருப்பவர்களுக்கு அழ வேண்டும் என்பது ஆசையல்ல. அதை துடைப்பதற்கு யாரும் இல்லை என்பது தான் நிஜம். எல்லாரும் ஏதோ ஒரு அன்புக்காக தான் ஏங்குறாங்க.
Comments